விடியல்

Thursday, April 13, 2006

கோத்ரா இரயில் எரிப்பு - விளக்கங்கள்

'கோத்ராவில் இரயில் பெட்டியை எரித்தது முஸ்லிம்கள் அல்ல. அது தானாகவே நடந்த விபத்து' என்பதை பானர்ஜி கமிஷன் மட்டும் உண்மைப்படுத்திடவில்லை. மற்றொரு ஆய்வுக்குழுவும் அதனை உண்மைப்படுத்தி இருக்கின்றது.

இந்த அழிவுகளை ஆய்வு செய்யும் குழு யாரையும் சாராதது. இதன் ஆங்கிலப் பெயர் Hazards Centre.

இதில் பல மேதாவிகள் அங்கத்தினராகவும் உதவி செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் இதுபோன்ற விபத்துகள் எங்கே நடந்தாலும், அதன் உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கும், அரசுக்கும் சொல்வார்கள்.

இவர்கள், தங்களுடைய ஆய்வை (கோத்ரா இரயில் எரிப்புச் சம்பந்தப்பட்ட ஆய்வை) நடத்திக் கொண்டிருக்கும்போது, இன்னொரு இரயில் பெட்டி எரிந்து போனது (Coach No. 16526 GSCN, Kept at Jagdhir). இந்த இரயில் பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸின் எரிந்த S6 பெட்டியைப் போன்றதே. Nov. 21, 2003ல் டெல்லியில் இதனை சுத்தம் செய்து (Maintenance) கொண்டிருக்கும்போது இஃது எரிந்து போனது.

இத்தோடு இந்த அழிவுகளை ஆய்வு செய்யும் மையம் Hazards Centre இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எரிந்த ஆறு இரயில் பெட்டிகளை ஆய்வு செய்ததது.

டெல்லியில் சுத்தம் செய்யும்போது தீப்பிடித்த இரயில் பெட்டியிலும் தீ ஒரு படுக்கையின் அடியில் கனன்றது. பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்குள் பெட்டி முழுவதும் தீ பிடித்தது. பெட்டி பொசுங்கிப் போய்விட்டது. ஆனால் பெட்டிக்கு வெளியே எந்தச் சேதமுமில்லை, எரியவுமில்லை.

டெல்லியில், எரிந்த பெட்டியிலும் மேற்பகுதி வழியாகத்தான் தீ வேகமாகப் பரவியது.

இந்தக் குழு இன்னொரு உண்மையைக் கண்டெடுத்துச் சொல்லிற்று. அது 'டெல்லியில் எரிந்த பெட்டிக்கும், கோத்ராவில் எரிந்த பெட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவெனில் டெல்லியில் எரிந்த பெட்டியில் அனல் எப்படி கனன்றது என்பது தெரிந்திடவே இல்லை. கோத்ரா பெட்டியில் சிகரெட், பீடி, ஸ்டவ் ஆகிய பொருள்கள் பற்றிய தகவல்கள் உண்டு!'

எனினும் டெல்லி பெட்டியில் தீ பரவிய வேகமும் கோத்ரா பெட்டியில் தீ பரவிய வேகமும் ஒன்று போல்தான் உள்ளது.

யாரும் வெளியே இருந்து எந்தப் பொருளையும், இரண்டு பெட்டிகளிலும் எறியவுமில்லை. நெருப்பிட்டுக் கொளுத்தவுமில்லை.

பானர்ஜி கமிஷன் மட்டுமல்லாமல், இதர நடுவுநிலை ஆய்வுகளும் சொல்லும் சேதி: யாரும் வெளியிலிருந்து பெட்டியினுள் எரிபொருள்களை ஊற்றிடவுமில்லை. நெருப்பைப் பற்ற வைத்திடவுமில்லை.

Based on Hazards Centre Findings, New Delhi.
Frontline, Feb. 11, 2005

இந்த விசாரணை இதர விசாரணைக் கமிஷன்களைப் போல் அல்ல.

காரணம், இதில் பல சிறப்புத் தகுதிகளைக் கொண்ட ஆய்வாளர்கள் இடம்பெற்றார்கள். அவர்கள்,

ஏ.கே. ராய் - இவர் ஓர் இரசாயன என்ஜினியர்தினேஷ் மோகன் - பயோ கெமிக்கல் என்ஜினியர். இவர் இத்துறையில் பேராசிரியராக ஐஐவு யில் பணியாற்றுகிறார். இத்தோடு இவர் காயம்பட்ட மனிதர்கள், அந்தக் காயங்களால் என்னென்ன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை ஆய்வு செய்வதிலும் வல்லவர்.

சுனில் கேல் - இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவரும் ஐஐவுல் பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் தெர்மோ டைனமிக்ஸ், திரவங்கள் என்பனவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்.

எஸ்.என். சக்கரவர்த்தி - இவரும் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் இரயில் பெட்டிகளின் நிலையியல் வல்லுநர். மும்பையில் அலுவலவகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ரெயில்வேக்கு இரயில் பெட்டிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

நன்றி: விடியல் வெள்ளி, ஏப்ரல் 2006

0 Comments:

Post a Comment

<< Home